“என்னுடைய படங்கள் தொடர்ந்து வெற்றி அடைவது மகிழ்ச்சி” – ஜி.வி.பிரகாஷ்

தன்னுடைய திரைப்படங்கள் தொடர்ந்து வியாபார ரீதியாக வெற்றி அடைவது மகிழ்ச்சியை கொடுப்பதாக ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘செல்ஃபி’ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குநர் மணிமாறன், நடிகை வர்ஷா மற்றும் படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், தான் நடிக்கும் திரைப்படங்கள் சமீபத்தில் தொடர்ந்து வியாபார ரீதியில் வெற்றியடைவது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவித்தார்.

image

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு ‘செல்ஃபி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார். அந்த தொலைக்காட்சி உரிமை மூலமே படத்திற்கு லாபம் கிடைத்துவிட்டது என தெரிவித்தார். அத்துடன் ‘செல்ஃபி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் தன்னுடைய நிறுவனத்தில் அடுத்தப்படத்தை இயக்க வேண்டும் என 10 லட்சம் ரூபாயை முன் தொகையாக கொடுத்தார் கலைப்புலி எஸ்.தாணு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.