குழந்தைகளை தாக்கும் மர்மக் காய்ச்சல்; அலட்சியப்படுத்த வேண்டாம்

உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் இன்று ஒரு மர்மமான நோயுடன் போராடி வருகின்றனர். இந்த நோயிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்
இந்த மர்ம நோயால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தி சன் செய்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வல்லுநர்கள் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளனர் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும், இதனால் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், இந்த ஹெபடைடிஸின் சாத்தியமான காரணம் அடினோவைரஸ் என்று நம்புகிறார்கள். இது ஒரு பொதுவான வைரஸ் என்று நம்பப்படுகிறது, இது காய்ச்சல் மற்றும் காஸ்ட்ரோ அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. 

வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி முக்கிய அறிகுறிகளாகும்
இளம் வயதினருக்கு கல்லீரல் அழற்சி அரிதாகவே தென்படுகிறது. இருப்பினும், இங்கிலாந்து ஹெல்த் ப்ரொடெக்ஷன் ஏஜென்சியின் அறிக்கையின் படி, அடினோவைரஸ் வகை 41F குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெபடைடிஸுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். அதன்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.

அடினோவைரஸின் ஆரம்ப வகை 41F போன்றது என்று அறிக்கை கூறுகிறது. அதன் தரவு இரத்த மாதிரிகளிலிருந்து எடுக்கப்படலாம். அதே நேரத்தில், இரத்தம் அல்லாத மாதிரிகளிலிருந்து பிற வகையான வைரஸ்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் 1-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அடினோவைரஸ் அதிவேகமாக பரவி வருகின்றது. 

இந்த நோய்க்கு அடினோவைரஸ் தான் காரணம்
இங்கிலாந்தின் சுகாதார சேவை ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் மீரா சந்த் கூறுகையில், குழந்தைகளில் திடீரென ஏற்படும் ஹெபடைடிஸ் அதிகரிப்பு அடினோவைரஸ் தொற்றுடன் தொடர்புடையது என்று ஆராச்சிகள் காட்டுகின்றன. இருப்பினும், இதற்கு பிற காரணங்களும் இருக்கலாம். எனவே உங்கள் குழந்தைக்கு இதுபோன்ற அறிகுறிகளைக் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.