நாகப்பட்டினம் அருகே மீன்பிடி துறைமுகம் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடக்கம்!

நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சென்னை ஐஐடி மாணவர்கள் தொடங்கினர்.

இதற்காக எக்கோ சவுண்டர் கருவிகளுடன் வந்த ஐஐடி மாணவர்கள், கடல் முகத்துவாரம் அருகே இரு புறமும் கருங்கல் தடுப்பு சுவர் அமைய உள்ள பகுதிக்கு படகில் சென்று கடலின் மேல்மட்டத்திலிருந்து ஆழம் வரை அந்த கருவி மூலம் அளவீடு செய்தனர்.

மேலும் கடல் ஆழத்தின் அடியில் உள்ள சேறு மற்றும் மணலையும் தர ஆய்வுக்கும் எடுத்துக் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.