உக்ரைன் மீதான படையெடுப்பின் ஆரம்ப நாட்களில் நூற்றுக்கணக்கான துருப்புகளுடன் ரஷ்ய விமனாம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா என தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தங்கள் விமானங்களை உக்ரைன் வெளியேற்றவும் அமெரிக்கா உதவியுள்ளது.
குறித்த தகவலை முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் தரப்பு செய்தி ஊடகம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
கீவ் விமான நிலையம் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க, அமெரிக்கா உக்ரைனுக்கு உடனுக்குடனான தரவுகளை தந்துதவியுள்ளது.
நேட்டோ பங்காளியாக இல்லாத ஒரு நாட்டிற்கு உளவுத்துறை பகிர்வு என்பது மிகப்பெரியது எனவும் இதற்கு முன்னர் அவ்வாறு நடந்ததில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதல் சில நாட்களில், அமெரிக்க பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சட்டத்தரணிகள் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்த உதவும் சில தகவல்களைப் பகிர்வதைக் கட்டுப்படுத்தினர்.
இருப்பினும், ரஷ்யா தனது படையெடுப்பை முன்னெடுத்துச் சென்றதால், அந்த வழிகாட்டுதலை அகற்றுவதற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்தது என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.