பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் ரஷ்ய ஏவுகணைக்கு பறிகொடுத்த நபர்: கலங்க வைக்கும் புகைப்படம்


உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு பச்சிளம் குழந்தை உட்பட மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த நபர் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் பார்ப்போர்களை நொறுங்க வைத்துள்ளது.

ரஷ்ய- உக்ரேனிய மக்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்த போது ரஷ்ய துருப்புகள் உக்ரேனிய குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது.

இதில் 30 வயதான Yuri Glodan என்பவரின் மனைவி, 3 மாத பச்சிளம் குழந்தை மற்றும் அவரது மாமியார் உட்பட மொத்தம் 8 பேர்கள் கொத்தாக பலியாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் தமது குடும்பத்தை பறிகொடுத்த Yuri Glodan, அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது பார்ப்பவர்களை கலங்கடித்துள்ளது.

தமது மாமியாரின் சவப்பெட்டியில் முத்தமிட்டு, பின்னர் மனைவி இறுதியில் தமது பிஞ்சு மகளின் சவப்பெட்டியில் கண்ணீருடன் முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் Yuri Glodan.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தாக்கியதில் அவரது சிறிய குடும்பம் கொல்லப்பட்டது.

இவர்களுடன் மேலும் ஐவர் தொடர்புடைய ஈஸ்டர் படுகொலையில் கொல்லப்பட்டுள்ளனர்.
தமது மகளின் முதல் ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டிருந்துள்ளார் Yuri Glodan.

இந்த நிலையில், பல்பொருள் அங்காடிக்கு செல்ல குடியிருப்பில் இருந்து வெளியேறியவருக்கு, பின்னர் மனைவி, மகள் உட்பட மொத்த குடும்பமும் பலியான தகவலே கிடைத்துள்ளது.

இவர்களது இறுதிச்சடங்குகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதல் தொடர்பில் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் திரளான மக்கள் இறுதிச்சடங்குகளுக்கு திரண்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.