புதிய உச்சத்தை எட்டியது மின் நுகர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் கடும் மின்வெட்டு நிலவுகிறது.

பல்வேறு மாநிலங்களில் நிலவும் மின்வெட்டை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு சீராக விநியோகம் செய்யவில்லை என சில மாநில அரசுகள் குற்றம்சாட்டியும் வருகிறது.

latest tamil news

இந்த நிலையில், மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 201 ஜிகாவாட் மின் தேவை ஏற்பட்டது. இதனால் மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின் தேவை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் மின் தேவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பை காட்டுகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.