`வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை வேறு வழியில் மாற்றுங்கள்!' – மனு கொடுத்த புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை செம்பாட்டூர் ஊராட்சி நரங்கியன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில், “செம்பாட்டூர் ஊராட்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குடிநீர் ஊரணி ஒன்று உள்ளது. இந்த ஊரணி எங்கள் பகுதி சுற்றுவட்டார பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆதரமாக விளங்கி வருகிறது. 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஊரணியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஊரணி வழியாக செயல்படுத்த நிலம் கையகப்படுத்த உள்ளனர்.

மனு கொடுத்த கிராம மக்கள்

இதனால், சுற்றுவட்டார மக்கள் அனைவருக்கும் கடுமையான சிரமத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். மேலும், இந்த இடத்திலேயே ஊர் மக்களால் கட்டப்பட்டுள்ள 2 கோயில்கள், தண்ணீர் தொட்டி போன்றவை அமைந்துள்ளது. எனவே, இந்த வழியைத் தவிர்த்து அருகிலேயே அரசுக்கு தேவையான இடம் இருப்பதால் அதனை, அரசு மறு ஆய்வு செய்து பரிசீலித்து அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த வழியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.