Nayanthara:உண்மை புரிந்து தான் நயன்தாரா ஒதுங்கிட்டாரா?

விஜய் சேதுபதி,
நயன்தாரா
, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும்
காத்து வாக்குல ரெண்டு காதல்
படம் நாளை வெளியாகவிருக்கிறது.
விக்னேஷ் சிவன்
இயக்கியிருக்கும் அந்த படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் நயன்தாரா.

அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என்று கறாராக கூறிவிடுவார். ஆனால் தானே தயாரித்திருக்கும் படமான காத்து வாக்குல ரெண்டு காதலை நயன்தாரா விளம்பரம் செய்யவில்லை.

சொந்த நிறுவன படத்தையே நயன்தாரா கண்டுகொள்ளாதது ஏன் என்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீங்க போய் இப்படி பண்ணலாமா நயன்தாரா?: ரொம்ப தப்பாச்சே
வித்தியாசமான மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா போய் விஜய் சேதுபதியின் அன்புக்காக சமந்தாவுடன் மோதும் கதையில் நடித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா தன் இமேஜை டேமேஜ் செய்திருக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த உண்மை புரிந்து தான் நயன்தாரா அந்த படத்தை விளம்பரம் செய்யவில்லை போன்று என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

இதற்கிடையே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியானதால், அது படத்தின் விளம்பரத்திற்காக கூட இருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.