இந்திய வம்சாவளிக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

சிங்கப்பூர்- சிங்கப்பூரில், மனநிலை பாதிக்கப்பட்டவர் என, டாக்டர் அளித்த ஆதாரங்கள் ஏற்கப்படாமல், போதைப் பொருள் கடத்திய வழக்கில், மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிக்கு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேல்முறையீடுஇங்கு, மலேஷியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம், 34, கடந்த 2009ல் ஹெராயின் கடத்தி வந்ததாக கைதானார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2010ல் அவருக்கு துாக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என, அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். டாக்டரின் சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை ஏற்க மறுத்த நீதிமன்றம், தர்மலிங்கத்தின் துாக்கு தண்டனையை உறுதி செய்தது. ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு நவ., மாதம், தர்மலிங்கத்திற்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இதற்கிடையே, அவர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.’

இந்த வழக்கில் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும்’ என, மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங்கிற்கு கடிதம் எழுதினார். அதில், ‘சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், மனநலம் பாதிக்கப்பட்டவரை துாக்கிலிடுவது தடை செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டு, ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு இருந்தனர்.போராட்டம் முடிவுஇருப்பினும், தர்மலிங்கம் நேற்று துாக்கிலிடப்படுவார் என, அறிவிக்கப்பட்டது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என நினைத்த அவரது தாய், மீண்டும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நேற்று முன்தினம் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முடிவில், ‘இந்த தண்டனை சட்டப்படி சரியானது’ என, நீதிபதிகள் அறிவித்தனர். இறுதியாக, 10 ஆண்டு நீடித்த தண்டனைக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று சிங்கப்பூர் அரசால், தர்மலிங்கம் துாக்கிலிடப்பட்டார். அவரது இறுதி சடங்குகள், மலேஷியாவின் ஈப்போ நகரில் நடைபெறும் என, குடும்பத்தினர் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.