குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன், குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றார். மேலும், குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மொத்தம்  7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.  274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.
ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7,382 பணியிடங்களுக்கு நடக்கவுள்ள குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்.. 
உயரும் வெப்பநிலை – டெல்லிக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.