சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

சென்னை:
ட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் கூடியது. தற்போது துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், வணிக வரிகள், முத்திரைத்தாள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் காந்தி மற்றும் மூர்த்தி ஆகியோர் பதில் அளிக்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.