உக்ரேனில் ரஷ்ய வீரர்கள் ஐவரால் வன்கொடுமைக்கு இலக்கான 14 வயது சிறுமியின் நிலை பரிதாபம் என்றே தெரிய வந்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், குறித்த 14 வயது சிறுமி தற்போது கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய துருப்புகளால் சின்னாபின்னமாக்கப்பட்ட புச்சா பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி, கருக்கலைப்பு முடிவை கைவிட்டுள்ளதாகவும்,
இப்போது கருக்கலைப்பு செய்து கொண்டால் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில் அந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உளவியல் ஆலோசகரான Oleksandra Kvitko என்பவரே, தொடர்புடைய சிறுமியின் பரிதாப நிலை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், குழந்தையை ஏற்கும் பொருட்டு, சிறுமியுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்ய துருப்புகளின் வன்கொடுமைக்கு இலக்காகி கர்ப்பமடைந்துள்ள 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஒருகட்டத்தில் முடிவுக்கு வந்த பின்னர் 14 முதல் 16 வயதுடைய சிறுமிகள் பலர் கர்ப்பிணியாக காணப்படுவார்கள் என அவர் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்ய துருப்புகளுக்கு இரையானவர்களில் பெண்களும் ஆண்களும் சிறார்களும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் 25 வரையான காலகட்டத்தில், ரஷ்ய துருப்புகள் வெளியேறியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 101 வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.