வெப்பம் தாங்க முடியல… தண்ணீர் தொட்டியில் குளித்த குரங்குகள்| Dinamalar

நாகர்கோவில் : தக்கலை அருகே கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து அதில் குரங்குகள் ஆனந்த குளியல் போட்டன.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரம் மழைக்கு பின்னர் கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது.

ஒக்கி புயலில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்த பின்னர் மாவட்டத்தின் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தக்கலை அருகே பத்மனாபபுரம் பகுதியில் இருந்து வந்த குரங்குகள் கூட்டம், இங்குள்ள கவுன்சிலர் ஷிபா வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளின் மூடிகளை கழட்டிய பின்னர் அதன் உள்ளே குதித்து குளியல் போட்டன.குரங்குகள் உள்ளே குதிப்பதும், குளித்து விட்டு மேலே வருவதுமாக இருந்தன. மனிதாபிமான அடிப்படையில் ஷிபாவின் குடும்பத்தினரும் அவற்றின் குளியலை தடுக்கவில்லை. நன்றாக குளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறி மலைப்பகுதிக்கு ஓடின.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.