புதுடில்லி-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, ‘யூரியா’வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய உரத் துறை செயலர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை, இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிண்டா மோரகோடா சந்தித்துப் பேசினார்.இலங்கையில், நெல் சாகுபடி காலம் துவங்கி இருப்பதால், அதற்கு தேவையான யூரியாவை வழங்கி உதவக்கோரி மிலிண்டா கோரிக்கை வைத்தார்.அவரின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ யூரியாவை உடனடியாக அனுப்பி வைக்க, ராஜேஷ் குமார் சம்மதம் தெரிவித்தார்.
புதுடில்லி-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, ‘யூரியா’வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.nsimg3029873nsimg நம் அண்டை நாடான இலங்கையில் கடும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.