இலங்கைக்கு யூரியா வழங்க மத்திய அரசு முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, ‘யூரியா’வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

latest tamil news

நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

latest tamil news

இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய உரத் துறை செயலர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை, இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிண்டா மோரகோடா சந்தித்துப் பேசினார்.இலங்கையில், நெல் சாகுபடி காலம் துவங்கி இருப்பதால், அதற்கு தேவையான யூரியாவை வழங்கி உதவக்கோரி மிலிண்டா கோரிக்கை வைத்தார்.அவரின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ யூரியாவை உடனடியாக அனுப்பி வைக்க, ராஜேஷ் குமார் சம்மதம் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.