கட்ரா பேருந்து தீ விபத்து தீவிரவாதத் தாக்குதல் என்று புதிய திருப்பம்.. என்.ஐ.ஏ.அதிகாரிகள் சம்பவ இடத்திலும், பேருந்திலும் ஆய்வு..!

ஜம்முவின் கட்ராவில் பேருந்து தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பேருந்து ஒரு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டு பயணிகளைக் கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பேருந்தை ஆய்வு செய்தனர்.

இத்தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பேருந்து மீதான தாக்குதலையடுத்து அமர்நாத் யாத்திரை மற்றும், கேதார் நாத் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை போன்றவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.