இன்று இரவு ரயில் சேவைகள் இடம் பெறமாட்டா

ஊரடங்குச் சட்டம் இன்று இரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (16) இரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதினால் ரயில்களை இயக்க முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திரு.செனவிரத்ன தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.