இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 5.00 மணிவரை ஊரடங்கு

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைவாக இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 வரையில் நாடுமுழுவதும் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
இதற்கமைவாக , அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.