மனைவி மீது சந்தேகம்.. கணவன் துணிகரம்.. கோவை அருகே பரபரப்பு..!

மனைவி மீது சந்தேகப்பட்டு தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர், சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அனிதா துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

சுதீருக்கு தனது மனைவி மீது சந்தேகம் இருப்பதால் அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவி மீது சந்தேகப்பட்ட அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தகாத வார்த்தைகளால் பேசி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 இதில் படுகாயமடைந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் சுதீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.