கை காட்டியும் நிற்காமல் சென்ற பேருந்து.. தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

சரியான நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட விட்டதாக குற்றச்சாட்டி பேருந்து நிலையத்தில் பேருந்தை தடுத்து நிறுத்தி பெண் போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராணி இவர் பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் இன்று காலை தூய்மை பணியை முடித்து நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
image
அப்போது, பேருந்தில் ஏறுவதற்காக நிறுத்தத்தில் நின்று கைகாட்டி உள்ளார், ஆனால், பேருந்தை ஓட்டுநர் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், அந்தப் பெண் மற்றொரு பேருந்தில் ஏறி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து நிற்காமல் சென்ற பேருந்தை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பேருந்தை பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்தி சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
image
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார், அவரை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர் இந்த நிலையில், இந்த சம்பவத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களை, பேருந்து ஓட்டுனர்கள் சிலர் படம் பிடிக்க விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.