`பிரார்த்தனை, உணவை மருந்தாக்கிடும்!' – 7 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு உணவுசேவை செய்யும் டீ கடை ராஜீவ்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரில், தென்னக ரயில்வே தலைமையகத்தை ஒட்டி டீக்கடை நடத்திவருபவர் ராஜீவ். நோயின் வலியால் வாடும் மக்களுக்குப் பசியின் வலியில் இருந்தாவது விடுப்பு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கஞ்சியும், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நபர்களுக்கு உணவும் இலவசமாக வழங்கிவருகிறார்.

அன்னதானம்

சிறிய அளவில் தொடங்கிய இந்தப் பணியின் உன்னதத்தை அறிந்து, நண்பர்களைத் தாண்டி பலரும் ராஜீவுக்குப் பணமாகவும், பொருளாகவும் உதவிவருகின்றனர். தங்கள் குடும்பத்தாரின் பிறந்தநாள், நினைவுநாள், சுப நிகழ்வுகளின்போதும் பணமாகவும், பொருளாகவும் அன்னதானத்துக்கு பலர் உதவிக் கொண்டிருக்கின்றனர்.

பகல் 12 மணிக்கு மதிய உணவும், மாலை 7 மணிக்கு இரவு உணவும் 300 பேருக்குக் குறையாமல் தினமும் வழங்கிவருகிறார். கொரொனா ஊரடங்கின்போது இந்த உணவால் பசியாறியவர்கள் ஏராளம்.

ராஜீவ்

கிராமங்களிலிருந்து வைத்தியம் பார்க்க சென்னைக்கு வருபவர்களிடம் பணம் அதிகம் இருக்காது, அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்; அதுவும் உணவளித்து உதவுவதுதான் சரியானதாய் இருக்கும் என்று நம்புகிறார் ராஜீவ்.

ராஜீவின் இந்தச் சேவை பற்றிய காணொலியைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.