லைகா, தனுஷ் – தயாரிப்பு நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கமா? – பின்னணி என்ன?

தனுஷின் ‘வொண்டர்பார்’ மற்றும் லைகாவின் யூடியூப் சேனல்கள் இன்று அதிகாலை மர்மநபர்களால் முடக்கம் செய்யப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட சேனல்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார்’ இப்போது படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டாலும், அதன் யூடியூப் சேனல் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த சேனல் மற்றும் தனுஷின் சமூக வலைதளங்களை பிரபலமான டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இன்று காலை முதல் இந்த சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடல் பல மில்லியன் வியூஸ்களைக் கடந்து யூடியூபில் அசுரத்தனமாக இன்றும் பார்வையாளர்களை ஈர்த்துவருகிறது. அதனால் வருமானம் கொழிக்கும் இந்த சேனலை மர்மநபர்கள் வேண்டுமென்றே ஹேக் செய்துள்ளதாக தனுஷின் வட்டாரம் தெரிவிக்கிறது. முடக்கப்பட்ட சேனலை வெளிக்கொண்டு வர தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு முயன்று வருகிறது. இதுகுறித்து யூடியூப் இந்திய நிறுவனத்திற்கும் புகார் அளித்துள்ளனர்.

லைகா புரோடெக்ஷன்ஸ்

இது போலவே லைகாவின் யூடியூப் சேனலையும் மீட்கும் முயற்சியில் அவர்களின் தொழில்நுட்ப டீம் இயங்கி வருகிறது. இரண்டுமே இன்று அதிகாலை 3 மணியில் இருந்து முடங்கிவிட்டதால், வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு இந்த சேனல்களை முடக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுமே விரைவில் தங்கள் சேனல்களை மீட்டுவிடுவோம். ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியையும் விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.