அறுவை சிகிச்சையின் போது தொலைக்காட்சி நடிகை சேத்னா ராஜ் மரணம்.. பெற்றோர் புகாரையடுத்து மருத்துவமனைக்கு சீல்..!

உடல் எடையை குறைக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறானதால் கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்னா ராஜ் எதிர்பாராத மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

22 வயதான சேத்னா ராஜ் பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அன்று மாலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

சிகிச்சை செய்த மருத்துவமனையில் ஐ.சி.யு., இல்லாததால், மஞ்சுநாத் நகரிலுள்ள வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தங்கள் மகள் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்த அவர் பெற்றோர் தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு எதிராகப் புகார் அளித்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.