ஆந்திராவில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்… வனத்துறைக்காவலர் உட்பட 6 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில் சென்னைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா அடுத்துள்ள மன்றம் பள்ளி கிராமத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலினையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

இதில் 2 டன் எடை கொண்ட நூறு செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்,  வனத்துறை காவலர் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். விசாரணையில் செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கடத்தவிருந்தது தெரியவந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.