“என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் தனது முதல் மனைவியை சட்டப்படி பிரிந்த நிலையில், கடந்த வாரம் மறுமணம் செய்திருந்தார். தனது மறுமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்து சமூகவலைதளத்தில் பேசியுள்ளார் இமான்.

தனது மறுமணம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள டி.இமான், “கடந்த ஞாயிற்றுக்கிறமை, மறைந்த பிரபல கலை இயக்குனர் உப்லாட் என்பவரின் மகள் அமலியை நான் மறுமணம் செய்துள்ளேன். எனது வாழ்வின் கடினமான தருணங்களிலும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்த எனது தந்தை கிருபாகர தாஸ் அவர்களுக்கு, எப்போதும் கடன்பட்டுள்ளேன்.

image

தொடர்புடைய செய்தி: `நான் குழந்தைகளை சந்திப்பதை தடுக்க சதி’- முன்னாள் மனைவி மீது டி.இமான் முறைகேடு புகார்

இந்த திருமணம், முழுக்க முழுக்கவே குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம் தான். கடந்த சில வருடங்களாக எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் இந்த திருமண ஏற்பாடு முக்கிய தீர்வாக இருக்கும். அந்தவகையில், இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து, அமலியை எனக்கு அறிமுக படுத்திய என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

image

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது, அளவிலாத மகிழ்ச்சியை எனக்கு தந்துள்ளது. எனது இந்த திருமணத்தில், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெஸிக்காவால் கலந்து கொள்ள முடியாது போயுள்ளது. அவர்களை இத்தருணத்தில் பெரிதும் மிஸ் செய்கிறேன். அவர்கள் என்னிடம் விரைவில் வருவதற்காக, பொறுமையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் என அனைவரும் எங்கள் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம்.

image

அமலியின் மிகப்பெரிய குடும்பத்தினர் என் மீது காட்டிய அளப்பறியா அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இத்தருணத்தில், எனக்கு ஆதரவுடன் இருக்கும் எனது இசை ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கவும் விரும்புகிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.