ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!!

சேலம் : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6.00 மணி நிலவரப்படி 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இன்று, காலை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை  தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.