திருமணம் தாண்டிய உறவு..? மகன், மகளுக்கு விஷம்… ஆண் நண்பருடன் பெண் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் சிக்ராபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா(25). இவருக்கு 3, 5 வயதில் மகனும், மகளும் இருந்தனர். பிரியங்கா தனது ஆண் நண்பர் குணால் கெய்க்வாட்(29) என்பவருடன் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மும்பை அருகில் உள்ள அலிபாக்கிற்கு வந்தார். அவர்கள் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினர்.

இந்நிலையில் பிரியங்காவின் கணவர் சந்தீப், தனது மனைவி, குழந்தைகளை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்திருந்தார். இதே போன்று குணால் மனைவியும் தனது கணவரை காணவில்லை என்று புகார் செய்திருந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் காலை 11 மணி வரை பிரியங்காவும் குணாலும், குழந்தைகளும் லாட்ஜ் அறையைவிட்டு வெளியில் வரவில்லை. லாட்ஜ் ஊழியர்கள் கதவை தட்டியபோதும் திறக்கப்படவில்லை. இதனால் அறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, இரண்டு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். உடனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவை திறந்த போது பிரியங்காவும், குணாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தனர்.

குழந்தைகள் கட்டிலில் இறந்து கிடந்தனர். அவர்கள் இரண்டு பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். போலீஸாரின் விசாரணையில், பிரியங்கா வீட்டு பணிகளை கவனித்தும் வந்ததும், குணால் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்தது. குணாலுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்திருக்கலாம் என்றும் குடும்பத்துக்கு பயந்து இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.