மும்பை பங்குச் சந்தை புதிய தலைவர் நியமனம்| Dinamalar

புதுடில்லி : நேற்று முன்தினம் நடந்த மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில், பொது நலப் பிரிவு இயக்குனராக உள்ள எஸ்.எஸ்.முந்த்ராவை, தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. முந்த்ரா, 40 ஆண்டுகளுக்கு மேலாக வங்கித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பேங்க் ஆப் பரோடாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். ரிசர்வ் வங்கி துணை கவர்னராக மூன்று ஆண்டுகள் பதவி வகித்தவர். மும்பை பங்குச் சந்தையின் தலைவர் விக்ரம்ஜித் சென் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, அப்பொறுப்புக்கு முந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.