1,183 கிலோ கஞ்சா பறிமுதல்| Dinamalar

கவுகாத்தி : திரிபுராவிலிருந்து அசாம் மாநிலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலும், அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலும், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து ஒரு லாரி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு வந்தது.இரு மாநிலங்களின் எல்லை அருகே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் இருந்த பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.