“அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை” : ரஜினிகாந்த் உருக்கம்!!

டான்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் கடைசி 30 நிமிடம் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போன் செய்து தனக்கு பாராட்டு தெரிவித்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 13ஆம் தேதி தியேட்டரில் வெளியானடான்கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடெக்ஷன்ஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

don

பள்ளி, கல்லூரி கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை, தமிழகத்தில் ரூ.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானடாக்டர்படம்வருண் டாக்டர்என்று தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டது போலவேகாலேஜ் டான்என்ற பெயரில்டான்தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

sk rajini

ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சென்ற சிவகார்த்திகேயன் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் “’டான்பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போன் செய்தார் என்று கூறினார்.

சிறப்பாக நடித்திருந்தீர்கள், கடைசி 30 நிமிடங்கள் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பாராட்டினார், சூப்பர் ஸ்டாரின் பாராட்டு ஊக்கமாக அமைந்தது எனவும் கூறியுள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.