உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்; ரஷ்யா அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

latest tamil news

கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அங்குள்ள மரியுபோல் நகரின் இரும்பாலையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இரும்பாலையில் பதுங்கி இருந்த 2000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யா படைகளிடம் சண்டையிட்டு வந்தனர்.


இந்நிலையில் இரும்பாலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்து வருவதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்தது. இதுவரை 1,730 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

latest tamil news

இதையடுத்து மரியுபோல் மற்றும் இரும்பாலை முழுவதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.