காதலன் வாட்ஸ் அப்பில் பிளாக் செய்ததால் தூக்கில் தொங்கிய காதலி!!

காதலன் வாட்ஸ் அப்பில் பிளாக் செய்ததால் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த பிரனாலி லோகரே (20) என்ற பெண்ணும், அவரைவிட 7 வயது அதிகமுள்ள இளைஞரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர்.

அப்போது பிரனாலி காதலனின் வீட்டில் தங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அந்த இளைஞர் வீட்டுக்கு செல் எனக் கூறி அனுப்பி வைத்தார். ஆனாலும் அங்கிருந்து புறப்பட்ட  பிரனாலி காதலனுக்கு போன் செய்து மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த இளைஞர் வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்திலும் பிரனாலியை பிளாக் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் காதலனின் வீட்டிற்கு சென்று ஏன் பிளாக் செய்தாய் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

Death

வேறு வழியின்றி தனது வீட்டில் தங்கிக்கொள்ளும்படி கூறிய காதலன் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சென்றுவிட்டு காலை வீடு திரும்பியிருக்கிறார். அப்போது பிரனாலி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த காதலன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்துக்கொண்ட பெண் தனது காதலன் மீது அளவுகடந்த பொசஸிவ்வில் இருந்ததாகவும் இது அந்த காதலனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை கொடுத்ததால் பிளாக் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.