அமெரிக்காவைவிட நாம பெட்டர்தான்… மத்திய அமைச்சர் கூல் பேச்சு!

இந்தியாவில் சில்லறை
பணவீக்கம்
கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமாக உயர்ந்தது. இதேபோன்று மொத்த விற்பனை பணவீக்கம் 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது குறித்து பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துவரும் நிலையில், இதற்கெல்லாம் கவலைபட வேண்டாம்; அமெரிக்காவை விட நாம பெட்டராகதான் இருக்கிறோம் என்று கூலாக கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இதுதொடர்பாக அவர், மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் பாஜக தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர் பேசியது:

கொரோனா தொற்று அதிகரித்திருந்த காலத்தில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒட்டு மொத்தமாக ஸ்தம்பித்திருந்தது. ஆனால் அப்போது, பிரதமர் மோடி,, தனது விவேகமான நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்தினார்.

தற்போது ரஷியா – உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு பொருட்கள், மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலி முறை சீர்குலைந்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலை, எந்த நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம்.

வல்லரசு நாடான அமெரிக்காவில், கடந்த 40 வருடஹ்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாக உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், அமெரிக்காவைவிட பணவீக்க விகிதம் இந்தியாவில் குறைவாகதான் உள்ளது. எனவே இதுகுறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று ராஜ்நாத் சிங் கூலாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.