சிறையில் இருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு இந்திராணி முகர்ஜி கைதுசெய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து ஆறரை ஆண்டுகளுக்குப்பிறகு இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.