நாளை குரூப் 2 தேர்வு: தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் குறித்து அவசர அறிவிப்பு

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தருமபுரிமாவட்டத்தில் தேர்வு மையம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்   திவ்யதர்ஷினி அவசர அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group II & II A (Interview / Non.Interview Posts)  நடத்தும்  முதல்நிலைப் போட்டித் தேர்வு  நாளை (21.05.2022)   நாளை நடைபெற உள்ளது. இதற்காக தருமபுரி மாவட்டத்தில் 136 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 37,366 பேர்  இப்போட்டித் தேர்வினை எழுத உள்ளனர்.

இந்த நிலையில், சில தேர்வு மையம் தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு -II – Group 2 & 2 A {Interview/Non Interview Posts) அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைப் போட்டித் தேர்வு வரும் 21.05.2022 (சனிக்கிழமை) அன்று முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு-II – Group || & II A {Interview/Non Interview Posts) அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வினை தருமபுரி மாவட்டத்தில் எழுத உள்ள தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் நல்லம்பள்ளி வட்டம், Hall No.039, Govt. Hr. Sec. School, Gooli kottai, Rajakollahalli (P.O), B. Agraharam Viz, Nalampalil Taluk என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக “Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road” என்பதே தேர்வு மையம் ஆகும்.

எனவே, Hall No.039.-ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் ” Govt. Higher Sec. School, B.Agraharam, Pennagaram Main Road” என்ற தேர்வு மையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.