விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் – எலான் மஸ்க் மீது புகார்!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த 2016 ஆம் ஆண்டு தனி விமானத்தில் பறந்த போது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதை அடுத்து அந்த தவறை மறைப்பதற்காக, கடந்த 2018 ஆம் ஆண்டு, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம், 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை,
எலான் மஸ்க்
திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

நான் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒரு பகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என் மீது அரசியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

ஆனால், அவர்களெல்லாம் என்னைச் சிறந்த எதிர்காலத்திற்காகப் போராடுவதிலிருந்தும், சுதந்திரம், பேச்சுரிமை குறித்து பேசுவதிலிருந்தும் தடுக்க முடியாது.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட நான் முனைந்திருந்தால், எனது 30 ஆண்டு கால வாழ்க்கையில் இதுவே முதல் முறையாக வெளிச்சத்திற்கு வர வாய்ப்பில்லை. எனவே, என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.

இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.