3 வயது குழந்தையின் தலையில் சில்வர் பானை மாட்டிக் கொண்டதால் குழந்தை அவதி

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் 3 வயது குழந்தையின் தலையில் சில்வர் பானை மாட்டிக் கொண்டதால் சிரமடைந்தது.

வீட்டில் சில்வர் பானையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் என்ற குழந்தையின் தலையில் அந்த பானை மாட்டிக்கொண்டது. இதனால் அச்சத்தில் குழந்தை அலறியது. இதனைப் பார்த்து பலர் சிரித்த நிலையில், பெற்றோர் வேதனையுடன் காணப்பட்டனர். பானையை எடுக்க பலரும் வெகு நேரம் போராடினர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள ஆசாரி பட்டறையில் இருந்து கட்டர் கொண்டுவரப்பட்டு பானையை கத்தரித்து குழந்தையை மீட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.