இந்தியாவில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

நேற்று பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 371 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் மேலும் 65 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 63 மரணங்கள் அடங்கும்.

இது தவிர நேற்று உத்தரபிரதேசம், டெல்லியில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,413 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 97 ஆயிரத்து 3 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 2,202 பேர் அடங்குவர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14,955 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 41 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 192 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 14,37,381 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 4,42,681 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.67 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.