இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் – ராகுல்காந்தி

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று ‘இந்தியாவுக்கான திட்டங்கள்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, நான் சில ஐரோப்பிய அதிகாரிகளிடம் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் மாறிவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். எதையும் கேட்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்போது (இந்திய அரசிடமிருந்து) என்ன உத்தரவு கிடைக்கிறதோ அதை எங்களிடம் அப்படியே தெரிவிக்கின்றனர். எங்களிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படுவதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் என்னிடம் கூறுகின்றனர். நீங்கள் இவ்வாறு செய்யக்கூடாது’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.