#கரூர் || மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்.. குற்ற உணர்ச்சியால் எடுத்த விபரீத முடிவு..!

மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் முத்துலெட்சுமி. இவர் தனது வீட்டிலேயே தையல் மிசின் வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு துணிதைத்டு கொடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் துணி வெட்டிய போது அவரது நான்கு வயது மகனின் கண்ணில் எதிர்பாராத கத்தரிக்கோல் குத்தியது.

இதனால், சிறுவனின் பார்வை பறிபோனது. தன்னால் தான் மகனின் பார்வை பரிபோனதாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், அவர் தனது மகனை இடுப்பில் கட்டிகொண்டு அங்குள்ள கிணற்றில் குதித்து  தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.