சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.! காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய போது, ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? அவர்தானே ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்தவர் அவர்தான் என்று கடுமையாக சாடினார்.

சீமானின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், அதுமட்டுமின்றி சீமானின் உருவ பொம்மையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.! காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை.

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.! காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு

போராலும் பிரிக்க முடியாது… கணவர் தொடர்பில் ஜெலென்ஸ்கி மனைவி உருக்கம் 

சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என சாடியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.