தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வியாபாரி.. கோவை அருகே நிகழ்ந்த சோகம்..!

தொழில் நஷ்டத்தால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி சுகந்தா தேவி என்ற மனைவியும்  இரு மகள்களும் உள்ளனர். இவர் கிரீன் பார்மர் என்ற பெயரில் டிராக்டர் எக்யூப்மென்ட் கடை நடத்தி வருகிறார்.

இவர் பெருந்துறையில் உள்ள அவரது மாமனார் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், தொழில் நஷ்டத்தால்  மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.