மேலாடையின்றி உக்ரைன் பெண்கேன்ஸ் விழாவில் பரபரப்பு| Dinamalar

கேன்ஸ் : ‘கேன்ஸ்’ திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பின்போது, உக்ரைனைச் சேர்ந்த பெண், மேலாடையின்றி நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இந்தப் போரின்போது, சிறுமியர் உட்பட இளம் பெண்களை ரஷ்யப் படையினர் பாலியல் பலாத்காரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில், பல நாட்டு திரை பிரபலங்கள் வந்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், தன் மேலாடையை கழற்றி விட்டு சிவப்பு கம்பளத்தில் சென்றார். உக்ரைனின் தேசியக் கொடியை உடலில் வரைந்திருந்த அவர், ‘எங்களை பலாத்காரம் செய்யாதீர்கள்’ என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.