வாடிக்கையாளராக நடித்த போலீஸ்காரரிடம் கேள்வி 11 பெண்களில் யார் உங்களுக்கு வேணும்?: மசாஜ் சென்டர் நிர்வாகி உட்பட 12 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மாலில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைநகர் டெல்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள தனியார் மாலில், ‘ஸ்பா’ மற்றும் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விபசார தொழில் அமோகமாக நடப்பதாக டெல்லி போலீசுக்கு புகார் சென்றது. அதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் வாடிக்கையாளரை போன்று, அந்த மசாஜ் சென்டருக்கு சென்றார். அவரிடம் ரூ.1,000 வசூலித்துக் கொண்டு மசாஜ் செய்துவிட்டனர். அதன்பிறகு, 11 பெண்களை அவரிடம் காட்டி, அவர்களில் யாரேனும் ஒருவரை பாலியல் உறவுக்குத் தேர்வு செய்யும்படி அங்கிருந்த நிர்வாகி கேட்டார். அதற்காக அவரிடம் ரூ. 1,000 கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடத்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் மறைந்திருந்த போலீசார் திடீரென மசாஜ் சென்டருக்குள் நுழைந்தனர். அவர்கள் மசாஜ் ெசன்டரை முழுவதுவமாக சோதனையிட்டனர். அப்போது விபாசாரத்தில் ஈடுபட்ட பெண்கள், வாடிக்கையாளர்கள் என 11 பெண்கள் மற்றும் நிர்வாகி என 12 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களை ஆனந்த் விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி டிசிபி கூறுகையில், ‘சுனில் கட்டியால் என்பவரின் பெயரில் ஸ்பா செயல்பட்டது. தற்போது அந்த ஸ்பாவின் உரிமம் காலாவதியாகி உள்ளது. டெல்லி மாநகராட்சியும் அந்த ஸ்பா ெதாடர்ந்து செயல்பட தடை விதித்துள்ளது. தற்போது அந்த வளாகத்தை சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.