2 ஆண் குழந்தைகளுடன் தாய் கொடூரமாக அடித்துக் கொலை.. ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்.!

திருப்பூர் அருகே 2 மகன்களுடன் தாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்து மாரி என்ற அந்தப் பெண், கணவரைப் பிரிந்து, திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பகுதியில் தனது ஆண் நண்பருடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இவருடன் 9 மற்றும் 4 வயதான இவரது ஆண் குழந்தைகளும் வசித்து வந்தனர். காலை நீண்ட நேரமாகியும் முத்துமாரியின் வீடு திறக்கப்படாத நிலையில், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவரும் அவரது மகன்களும் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்துள்ளனர்.

முத்துமாரியுடன் தங்கியிருந்த அவரது ஆண் நண்பரைக் காணாத நிலையில், கொலையை அவர் செய்தாரா அல்லது முத்துமாரியின் கணவர் கொலை செய்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.