ஒரே பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள் இடையே தகராறு.. இருவரிடமும் விசாரணை.!

திருப்பூரில், ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்ட விவகாரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகரைச் சேர்ந்த அஜித், ஹரி ஆகியோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் தகராறு இருந்து வந்த நிலையில் அஜித்தின் வீட்டிற்கு சென்ற ஹரி அவரது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது நடந்த கைகலப்பில் ஹரியின் நண்பர் ராஜ்குமார் படுகாயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அஜித்தின் சகோதரர் சக்திவேலை கைது செய்த போலீசார், அஜீத் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.