சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு.!

பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் மே 27ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.