ஜப்பானில் இன்று துவங்குகிறது குவாட் மாநாடு;| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டோக்கியோ: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ‘குவாட்’ மாநாடு இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். முன்னதாக ஜப்பானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் டோக்கியோவில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

latest tamil news

இந்நிலையில் இன்றைய முக்கிய நிகழ்வாக டோக்கியோவில் ‘ குவாட்’ மாநாடு துவங்குகிறது. இதில் உணவு பாதுகாப்பு, ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ‘குவாட்’ தலைவர்கள் விவாதிக்கின்றனர். பின்னர் பிரதமர் மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.