நடிகர் டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி! மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லும் மகன் சிம்பு.. முக்கிய தகவல்


பிரபல நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையில் தனித்த அடையாளமாக திகழ்பவர் டி.ராஜேந்தர். இயக்கம், நடிப்பு, இசை என அத்தனை துறைகளிலும் அவர் முத்திரை பதித்தவர்.

இவரது மகன் சிம்பு முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்த நிலையில் டி.ராஜேந்தருக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
டி.ராஜேந்தர் உடலில் உள்ள பிரச்சனை குறித்து இரு வேறு தகவல்கள் உலா வருகின்றன.

நடிகர் டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி! மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லும் மகன் சிம்பு.. முக்கிய தகவல்

அதன்படி அவரது வயிற்றுக் குள் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு தகவலின்படி டி.ராஜேந்தர் இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை தனி விமானம் மூலம் அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவருடன் மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன், மகள் இலக்கியா ஆகியோரும் அமெரிக்கா செல்கிறார்கள்.
இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

டி.ராஜேந்தர் உடல்நிலை தொடர்பாக அவரது மகன் நடிகர் சிம்பு இன்று அறிக்கை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் டி.ராஜேந்தருக்கு நெஞ்சு வலி! மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லும் மகன் சிம்பு.. முக்கிய தகவல்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.