ஹிந்தி மொழி அறிவு: மத்திய அரசு அறிக்கை| Dinamalar

புதுடில்லி: ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அலுவல் மொழியான ஹிந்தியில் பணிபுரியும் அறிவைப் பெற்றுள்ளனர்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பார்லிமென்ட் அலுவல் மொழிக்குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும். இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசும் குடிமக்கள் சந்திக்கும்போது அவர்கள் ஹிந்தியில் உரையாட வேண்டும்’ என கூறினார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அலுவல் மொழியான ஹிந்தியில் பணிபுரியும் அறிவைப் பெற்றுள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.