டிராக்டரில் உழுதுகொண்டிருந்த விவசாயி மீது மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

வாணியம்பாடி அருகே டிராக்டரில் உழுதுகொண்டிருந்த விவசாயி மீது மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

கலந்திரா கிராமத்தை சேர்ந்த செளந்தர் என்பவர் விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்த போது, மின் கம்பம் ஒன்று அவரது டிராக்டர் மீது சாய்ந்தது. மின்சாரம் பாய்ந்ததால் உடல் முழுதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய செளந்தரை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலவீனமாக இருந்த மின்கம்பம் குறித்து பலமுறை புகாரளிக்கப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.